தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாட்டுவண்டி பந்தயத்தில் 113 ஜோடி மாடுகள் பங்கேற்பு

தேவகோட்டை, நவ.6: தேவகோட்டை அருகே பனையூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பனையூர்-தேவகோட்டை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக 2 சுற்றுகளாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 30 ஜோடிகளும், 4 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 83 ஜோடிகள் என மொத்தம் 113 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

Advertisement

இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர்.

விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியினை பருத்தியூர், புளியால், தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கைதட்டி உற்சாகமாக கண்டுகளித்தனர்.

 

Advertisement

Related News