தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சுழி, அக்.4: நரிக்குடி பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சியின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில், நரிக்குடி மற்றும் வீரசோழன் பேருந்து நிலையத்தில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், தடுக்கும் வழிமுறைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்மை சுற்றியுள்ள சமூகம் காட்ட வேண்டிய அக்கறைகள் ஆகியவை குறித்து தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் மூலமாக எளிமையான முறையில் பொதுமக்களுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நரிக்குடி பேருந்து நிலையத்தில் கூடி இருந்த பொதுமக்கள், அந்த வழியாக சென்ற பயணிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

 

Advertisement

Related News