தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எச்ஐவி தடுப்பு பணிகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம் கலெக்டர் தகவல்

 

Advertisement

விருதுநகர், டிச.2: தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது என, கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கூறுகையில், உலக எய்ட்ஸ் தினம் டிச.1ல் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாக இடையூறுகளை கடந்து எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல் என்பதை மையமாக வைத்து உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நடத்தப்படுகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனை, மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

Advertisement