தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரை வெட்டி கொன்றவர் கைது

 

Advertisement

மானாமதுரை, டிச. 2: மானாமதுரையில் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகர் மேட்டுத்தெருவில் வசித்து வருகிறார்.  இவரது மகன் சதீஸ்குமார் என்ற பாண்டி (26) நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்தார். அவரை நெப்போலியன் மகன் கிஷோர் என்பவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு நண்பர்கள் அழைத்திருந்தனர். செட்டிகுளம் ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிக்கும், சதீஸ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணி, சதீஸ்குமாரை தலை கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். படுகாயமடைந்த சதீஸ்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து சதீஸ்குமாரை கொலை செய்த மணியை கைது செய்தனர்.

 

Advertisement