தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூளைச் சாவு அடைந்த ஆட்டோ டிரைவர் உடலுறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு

 

விருதுநகர், ஆக.2: சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேர் பயனடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சங்கரேஸ்வரன்(46). இவர், கடந்த 29ம் தேதி நடந்த சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச் சாவு அடைந்தார்.

பின்னர் அவருடைய உறவினர்களின் ஒப்புதலுடன் அவருடைய உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், தோல், கண் போன்றவை உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தானமாக பெறப்பட்டது. இந்த உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு நான்கு பேர் பயனடைந்துள்ளனர். அவரது உடலுறுப்பு தானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெய்சிங், மயக்கவியல் துறை தலைவர் சேகர், மருத்துவ குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதைக்கு பின் உரியவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

 

Related News