தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உட்பட 4 பேர் படுகாயம்

சிவகாசி, நவ.1: சிவகாசி அருகே சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த புவனேஸ்வரன் (25) என்ற வாலிபர் தனது டூவீலரில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (26) என்பவருடன் எம்.புதுபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நமஸ்கரித்தான்பட்டி அருகே எரிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகராஜா (35) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் புவனேஸ்வரன் டூவீலர் மீது மோதியது.

Advertisement

இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் நாகராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் லட்சுமி(55).

இவர் சம்பவத்தன்று பள்ளப்பட்டி ரோட்டில் பால் வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News