தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி அருகே மகனை வெட்டிய தந்தை கைது

 

Advertisement

சிவகாசி, செப். 16: சிவகாசி அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே நாரணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கருத்தப்பாண்டி(42). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குடும்பத்தகராறு காரணமாக மகன் சுதாகருடன்(22) பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் சிவகாசி திரும்பிய கருத்தப்பாண்டி, தனது குடும்ப பிரச்சனைக்கு மனைவியின் தம்பி சூரியபிரகாஷ் தான் காரணம் என கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் நாரணாபுரம் பகுதியில் இவரது மச்சான் சூரியபிரகாஷ், மகன் சுதாகர் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கருத்தப்பாண்டி தலைமையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்

வழிமறித்து அரிவாளுடன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் ரத்த காயம் அடைந்த சுதாகர், சூரிய பிரகாஷ் இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மகன் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் கருத்தப்பாண்டி, சந்தோஷ்குமார், செல்லம்மாள், சந்தியா, கருப்பையா ஆகிய 5 பேர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கருத்தப்பாண்டி, சந்தோஷ் குமார்(26) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இதே சம்பவம் குறித்து கருத்தப்பாண்டி உறவினர் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சுதாகர், சூரியபிரகாஷ் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement