தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசியில் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் பெண் உட்பட 2 பேர் கைது

 

Advertisement

சிவகாசி, அக்.14: சிவகாசியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அனுப்பன்குளம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் தகர செட் அமைத்து அதில் உரிய அனுமதியின்றி பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்து பட்டாசு கடையில் இருந்த அனுப்பன்குளம் காளீஸ்வரன் மனைவி ஜானகி (54) என்பவரை கைது செய்தனர். இதே போல் சாத்தூர் ரோட்டில் மீனம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமாக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பட்டாசு கடையில் இருந்த ஜெயச்சந்திரன் (73) என்ற முதியவரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement