தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்திராயிருப்பில் உயர்மின் கோபுர விளக்கு ‘அவுட்’

வத்திராயிருப்பு, நவ.11: வத்திராயிருப்பில் உயர்மின் கோபுர விளக்கு மீண்டும் செயல்பட நடவடிக்க எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள நாடார் பஜார் பகுதி காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்த பஜார் வழியாக கான்சாபுரம், கூமாபட்டி பிளவக்கல் அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரம் விளக்கானது கடந்த சில நாட்களாக எரியாமல் கிடக்கிறது. இதனால் பஜார் பகுதி போதிய வௌிச்சமின்றி கிடப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த உயர் மின் கோபுர விளக்கினை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், முக்கிய பகுதியில் உள்ள உயர்மின்கோபுர விளக்கு பழுதடைந்து கிடப்பதால் போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே உயர்மின் கோபுர விளக்கு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement

Advertisement