தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொங்கல் திருவிழாவில் இரட்டைமாட்டு வண்டி பந்தயம்

கமுதி, ஜூலை 29: கமுதி அருகே பொந்தம் புளி வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவில், இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் கோயில் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் வானவேடிக்கை மேளதாளம் முழங்க, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, இறுதியில் அப்பகுதியில் உள்ள கண்மாயில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.

நேற்று திருவிழாவை முன்னிட்டு சின்னமாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.