தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி நகர் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவதி

சிவகாசி, செப்.14: சிவகாசி நகர் பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சிவகாசி நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படுத்து உறங்கும் மாடுகள் கண்ணுக்கு தெரியாததால், டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். சில சமயங்களில் பலத்த காயமடைந்து உயிரிழக்கும் சம்பவமும் நடக்கின்றது.

Advertisement

சாலையோரம் உள்ள கழிவுகள், தீவனங்களை மேய்வதற்காக மாடுகள் சாலையில் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக திரிகின்றன. மேலும் சாலைகள் மட்டுமின்றி, தெருக்களிலும் சுற்றி திரிகின்றன. சிவகாசி நகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சாலையில் மாடுகள் சுற்றிதிரிவது குறைந்துள்ளது. தற்போது மீண்டும் நகர்ப்பகுதிகளின் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement