தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருப்புக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு

அருப்புக்கோட்டை, டிச. 12: அருப்புக்கோட்டை அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை முனிபாண்டியும், அவரது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இரவில் பார்த்தசாரதியும், அவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவர்களது வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அதே ஊரை சேர்ந்த சக்தி, சிவா, தினேஷ், மணிமாறன், சந்துரு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்ய கோரி முனியாண்டி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அருப்புக்கோடி- பந்தல்குடி சாலையில் ராமசாமிபுரம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏஎஸ்பி மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து டவுன் விஏஓ சூர்யா கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக முனிபாண்டி, பார்த்தசாரதி, மணிகண்டன், உமா மகேஸ்வரி உட்பட 100 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News