தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அருப்புக்கோட்டை, டிச. 11: அருப்புக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை முனிபாண்டியும், அவரது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் இரவில் பார்த்தசாரதியும், அவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டில் உள்ள குளியறையில் இருந்து பலத்த சப்தம் கேட்டுள்ளது. ஆனால், தூக்க கலக்கத்திலிருந்த இருவரும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த முனிபாண்டி மற்றும் அவரது மனைவி குளியலறையில் வெண்டிலேட்டர் கண்ணாடி உடைந்து கிடப்பதையும், பெட்ரோல் வாடையுடன் உடைந்த நிலையில் தரையில் பாட்டில் ஒன்று கிடப்பதையும் பார்த்தனர். மேலும் சுவர் மற்றும் வெண்டிலேட்டரில் கரும்புகை படிந்துள்ளதையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சிடையடைந்தனர்.

இதுகுறித்து முனிபாண்டி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இதில் வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய கோரி முனிபாண்டி குடும்பத்தினர், உறவினர்கள் அருப்புக்கோடி- பந்தல்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் ஏஎஸ்பி மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News