தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் மீது வழக்கு ரூ. 35 ஆயிரம் நஷ்ட ஈடாக தர உத்தரவு

புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சேரி, வில்லியனூர், திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்த சரண்ராஜ் மனைவி கனகதூர்கா, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் புகார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020ம் ஆண்டு இருசக்கர எலக்ட்ரிக் வாகனத்தை, அதன் ஏஜெண்டான வில்லியனூரில் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து ரூ.72 ஆயிரத்து 730 பணத்தை செலுத்தி வாங்கினேன். முறைப்படி கம்பெனி அளித்த அட்டவணையின்படி சர்வீஸ் செய்து பராமரித்து வந்தேன். ஆனால் அந்த எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி சரியாக செயல்படவில்லை. மூன்று ஆண்டுகள் பேட்டரிக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தனர். 2023ம் ஆண்டு பேட்டரியை மாற்றிதர கேட்டபோது, உத்தரவாத காலம் முடிந்தாக நிறுவனம் தெரிவித்தது. இதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.

Advertisement

இதனை தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையம், வில்லியனூர் மோட்டார் சர்வீஸ் மற்றும் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதனை பெற்றுக்கொண்டு வழக்கில் ஆஜராகவில்லை. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து மனுதாரருடைய வாதங்கள் கேட்டறியப்பட்டது. எனவே இருசக்கர வாகனத்துக்கு பொருத்தமான நல்ல நிலையிலுள்ள புதிய பேட்டரியை மாற்றி தர வேண்டும். மோட்டார் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும், வழக்கு செலவுக்காக 5 ஆயிரமும் வழங்க ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவேதா மற்றும் ஆறுமுகம் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News