தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தலம்பட்டு வள்ளலார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டமா?

திருக்கனூர், ஜூலை 31: சித்தலம்பட்டு வள்ளலார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வைரலாகிவரும் வீடியோவால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். புதுச்சேரி, திருக்கனூரை அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு வள்ளலார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சியுடன் தகவல்கள் வைரலாகின. இதனைத் தொடர்ந்து விழுப்புரம், புதுச்சேரி மாவட்ட மக்கள் பீதியடைந்தனர். அதுவும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட சித்தலம்பட்டு பகுதியானது திருக்கனூரை ஒட்டி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ உண்மையானதா, அப்பகுதியில் எடுக்கப்பட்டதுதானா? என்பது தெரியாமல் உள்ளூர்வாசிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே வீடியோவில் பதிவாகி இருப்பது சிறுத்தை தானா அல்லது நாயா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisement

Advertisement

Related News