தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரங்கிப்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு அனுமதி மறுப்பு

புவனகிரி, நவ. 29: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் மழையால் மூடப்பட்டது. இதையடுத்து படகு சவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பரங்கிப்பேட்டை அருகே உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். உலக பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை எனப்படும் அலையாத்தி காடுகளின் அழகை கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தற்போது மழை பெய்து வருவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டு, படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. நேற்று காலை மழை இல்லாத நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி துவங்கியது. பிச்சாவரத்திற்கு வந்த ஒரு சில சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து படகு சவாரி செய்தனர்.

Advertisement

ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் சாரலுடன் மழை பெய்ய துவங்கியது. இதனால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கான டிக்கெட் கொடுப்பது நிறுத்தப்பட்டு, படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மழையால் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா மையத்தில் உள்ள படகு இல்லத்தை சுற்றிலும் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது. படகுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாலும், படகு இல்லத்திற்கு நடந்து செல்லும் நடைபாதையிலும் தண்ணீர் தேங்கி இருந்ததாலும் படகுகளில் ஏறுவதற்கு சுற்றுலா பயணிகள் அவதிப்படும் நிலை இருந்தது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், பொதுமக்கள் நடந்து செல்லும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. இதுபற்றி கூறிய சுற்றுலா பயணிகள், ‘படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் மழையால் படகு சவாரிக்கு அனுமதிக்கவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் செல்கிறோம்’ எனக் கூறினர்.

Advertisement

Related News