தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் நியமனத்துக்கு 7 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு

மரக்காணம், செப்.27: மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து தொடர்ந்து அந்த ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள சுலோசனா தன்னை ஊராட்சி மன்ற தலைவராக நியமிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மஞ்சுளா பொறுப்பு தலைவராக சுலோசனாவை நியமித்தார். இந்நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள 7 வார்டு உறுப்பினர்களும், எங்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலோசனாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதனால் அவரை பொறுப்புத் தலைவராக நியமிக்க கூடாது. அப்படி அவரை பொறுப்பு தலைவராக நியமித்தால் நாங்கள் 7 பேரும் எங்களது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மரக்காணம் வட்டாட்சியர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Advertisement

இந்நிலையில் நடுக்குப்பம் ஊராட்சிக்கு சுலோசனாவை பொறுப்பு தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சுலோசனா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுபோன்று இரு தரப்பினரும் மாறி மாறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துள்ள புகார் மீது இதுவரையில் உரிய விசாரணை நடத்தவில்லை என வார்டு உறுப்பினர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமையில் நடுக்குப்பம் ஊராட்சி மன்றத்திற்கு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. பொறுப்பு தலைவர் சுலோசனா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உதவி இயக்குனர் மஞ்சுளா பொறுப்பு தலைவருக்கு அடுத்தபடியாக அரசு கோப்புகளில் 2வது இடத்தில் கையொப்பம் இடுவதற்குரிய நபரை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு இருந்த 7 வார்டு உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தவில்லை. முறையாக விசாரணை நடத்திய பிறகு தான் இரண்டாவது கையொப்பமிட நபரை தேர்வு செய்ய முடியும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு இழுபறியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர் மற்றும் பொறுப்பு தலைவர் கொடுத்துள்ள மணுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி தீர்வு எடுப்பார்கள் எனக்கூறி மறு தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை உதவி இயக்குனர் முடித்துவிட்டு கிளம்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement