தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த அதிமுகவில் 3, 4வது அணி உருவாகிறதா? சி.வி சண்முகம் எம்பி பகீர் தகவல்

விழுப்புரம், நவ. 26: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த 3, 4வது அணி உருவானாலும் எங்களுக்கொன்றுமில்லை என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டிபூசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சற்றும் இடம் கொடுக்காததால் அவரை வீழ்த்தும் முயற்சியில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

Advertisement

அதன்படி ஓபிஎஸ் வரும் டிசம்பர் 15ம்தேதி புதிய இயக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக கூறியிருக்கிறார். அதேபோல், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற செங்கோட்டையன் த.வெ.கவில் இணையபோவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே அதிமுக பல பிரிவுகளாக உடைந்து கிடக்கும் நிலையில் தேர்தல் நேரத்தில் மேலும் பல அணிகள் உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சி.வி சண்முகம் விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் முயற்சியில், ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்கவுள்ளது குறித்தும், செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி சண்முகம், அதிமுகவை பற்றி மட்டும் கேளுங்கள். வெளியில் இருப்பவர்கள் அவர் அங்கு போகிறார், இங்கு போகிறார், 3வது அணி அமைக்கிறார், 4வது அணி அமைக்கிறார், உருளுகிறார், பெரளுகிறார் என எதுவாக இருந்தால் எங்களுக்கு என்ன?. என்று கூறிவிட்டு சென்றார். அதிமுகவில் 3, 4வது அணி என்று சி.வி சண்முகமே தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனால் நிச்சயம் அதிமுகவில் மேலும் பல அணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News