தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா கிடைக்கும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 17 வயது சிறுவன் அதிரடி கைது

விருத்தாசலம், நவ. 25: விருத்தாசலம் அருகே கஞ்சா கிடைக்கும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா கிடைக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு குறித்து அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இதுகுறித்து விசாரணை நடத்த பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் பெண்ணாடம் தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மறைந்திருந்த சிறுவனை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனிடம் இருந்த 15 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 200 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஞ்சா கிடைக்கும் என பதிவிட்டு சிறுவன் கைதான சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News