தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறப்பு

சேத்தியாத்தோப்பு, அக். 25:கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பழமையான அணைக்கட்டு அமைந்துள்ளது. 170 ஆண்டு பழமையான அணைக்கட்டான இதில் 7.5 அடி மொத்த நீர் கொள்ளளவு ஆக இருந்து வருகிறது. தற்போது அணைக்கட்டு பகுதி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை, மேற்கு பகுதியில் உள்ள நீர் தேக்கும் இடங்களான மணிமுத்தாறு, பிளாந்துறை அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வடிகால் பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் அணைகட்டுக்கு வந்தது. தற்போது நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

Advertisement

தற்போது சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு நீர்வரத்து மணிமுத்தாறு வழியாக 2000 கன அடியும், பிளாந்துறை அணைக்கட்டு பகுதியில் இருந்து ஆயிரம் கன அடியும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கட்டுக்கு வரும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மூன்று ஷட்டர்கள் மூலம் திறந்து வெள்ளாற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு நீர் தேக்கும் அளவை உயர்த்தி நடவடிக்கை எடுத்தால் இதன் மேட்டுப்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் நீர்மட்டம் மேம்படவும், தடையற்ற பாசனத்திற்கு வழி செய்யும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

Advertisement