தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக செயலாளரை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளருக்கு ஆயுள் சிறை திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

மயிலம், செப். 25: செஞ்சியில் அதிமுக நகர செயலாளரை அடித்து கொன்ற வழக்கில் டீக்கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ரங்கசாமி தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் வெங்கடேசன். செஞ்சி அதிமுக நகர செயலாளராக இருந்தார். செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16.3.2024 அன்று இரவு வெங்கடேசன் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் திடீரென வெங்கடேசனை வழிமறித்து திட்டி கட்டையால் தலையின் பின்பக்கத்தில் தாக்கினார்.

Advertisement

மேலும் தலையில் கல்லால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் (44), அவரது மனைவி கல்பனா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குமார் ராஜேந்திரன் குற்றவாளி என தீர்மானித்து ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் கல்பனா விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேந்திரனை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News