தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னசேலம் அருகே மொபட் மீது பைக் மோதி மகள் பலி, தாய் படுகாயம்

சின்னசேலம், செப். 23: சின்னசேலம் அருகே மொபட் மீது பைக் மோதி மகள் பலியானார். தாய் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (50). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ரோஷிணி (20) என்ற பொறியியல் படித்த மகளும், மகாராஜா (16) என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக குரால்காட்டு கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் வாங்கி, விவசாயம் செய்து வருவதுடன், அங்கேயே வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுகந்தியும், அவரது மகளும் மொபட்டில் தாகம்தீர்த்தாபுரம் புற்றுமாரியம்மன் கோயிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். மொபட்டை சுகந்தி ஓட்ட, அவரது மகள் ரோஷிணி பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். காளசமுத்திரம் ஏரிக்கரை அருகில் சென்றபோது எதிரில் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து பைக், சுகந்தி ஓட்டி வந்த மொபட் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த ரோஷிணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த சுகந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் விபத்து ஏற்படுத்திய அஜித்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement