தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி சைக்கிள் நிறுவன மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு ரத்து

புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரி காமராஜர் சாலையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ரூ.2.45 கோடி பணம் இருந்தது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமது உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் போலி சைக்கிள் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ேடார் முதலீடு செய்து, பணத்தை இழந்து வந்தனர். இதற்கிடையே பல கோடி மோசடி என்பதால் நேரடியாக தாமாக முன்வந்து அமலாக்கத்துறை இவ்வழக்கில் விசாரணை நடத்தியதோடு போலி சைக்கிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிஷாத் அகமதுவை அதிரடியாக கைது செய்தது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின.

Advertisement

விசாரணையில், நிஷாத் அகமது தன்னை காப்பாற்றிக்கொள்ள ரூ.80 லட்சத்தை வழக்கறிஞரிடம் கொடுத்து, சைபர் க்ரைம் போலீசார் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தியை காவல்துறை தலைமையகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் அமலாக்கத்துறை விசாரணையில், இன்ஸ்பெக்டர் மட்டுமல்லாது, மேலும் சில காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக நிஷாத் அகமது கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்கிடையே, போலி சைக்கிள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 2 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை, கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதனை, விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், முக்கிய பொறுப்பாளர்கள் 2 பேர் உட்பட 18 பேரை புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News