தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் பொம்மை வைத்து மாந்திரீக வழிபாடு

உளுந்தூர்பேட்டை, செப். 22: அரசு பள்ளியில் பொம்மை வைத்து மர்ம நபர்கள் மாந்திரீக வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நன்னாவரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கிராமத்தை சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் ஒரு பொம்மை வைத்து அதை சுற்றி மஞ்சள், குங்குமம் கொட்டப்பட்டு மாந்திரீகம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற பெற்றோர்கள் பள்ளியில் மர்ம நபர்கள் மாந்திரீக வேலைகள் செய்திருந்ததை பார்த்து அச்சமடைந்தனர்.

மகாளய அமாவாசை தினம் என்பதால் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் இதுபோன்று மாந்திரீக வழிபாடு செய்துள்ளதாக தெரிகிறது. எம்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்கனவே மாந்திரீக வழிபாடு மர்ம நபர்கள் செய்திருந்தனர். தற்போது நன்னாவரம் அரசு பள்ளியிலும் பொம்மை வைத்து மாந்திரீக வழிபாடுகள் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement