தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டி உடலை வலைதளம் மூலம் கண்டுபிடித்த மகன்

கடலூர், நவ. 19: கடலூர் முதுநகரில் கடந்த ஓராண்டாக முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் அவரது மகனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் தமிழரசி என்றும், வயது 75 என்றும் தெரிவித்தார். வேறு எந்த தகவலையும் அவரால் கூறமுடியாத நிலையில், பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் முதுநகரில் செயல்படும் இக்னைட் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

Advertisement

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக மூதாட்டி தமிழரசி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7ம்தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி 16ம்தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து மூதாட்டி மகனான சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்னநெற்குணம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர், சமூக வலைதளம் மூலமாக தகவல் அறிந்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் காவல்துறை ஒப்புதல் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஒப்புதல் பெற்றார். இதையடுத்து மூதாட்டியின் உடல் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்ய உடலை பெற்றுச் சென்றார். இதுதொடர்பாக பழனிவேல் கூறுகையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் திடீரென காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடி வந்தோம். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் அவர் இறந்த தகவல் அறிந்து உடலை பெற வந்தோம். உடலை எங்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய உள்ளோம் என்றார்.

Advertisement