தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரியாலூர் காவல் நிலைய 2 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் எஸ்பி மாதவன் உத்தரவு

கள்ளக்குறிச்சி, செப். 17: கரியாலூர் காவல்நிலையத்தில் 2 காவலர்கள் சர்ச்சையில் சிக்கியதால் சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே கரியாலூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய பிரபு அப்பகுதியில் உள்ள பெட்டிகடை உரிமையாளர் மகள் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் பிரபு மீது போக்சோ, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபுவை கள்ளக்குறிச்சி எஸ்பி மாதவன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement

மேலும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் யுவராஜ் என்பவர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் அரை நிர்வாணத்துடன் நின்றுகொண்டு ஆபாசமாக பேசிய வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் காவலர் யுவராஜை எஸ்பி சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். ஒரே காவல் நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் ஒரே நாளில் இரண்டு காவலர்களையும் எஸ்பி சஸ்பெண்ட் செய்த விவகாரம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News