தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் மீது லாரி மோதி தனியார் கம்பெனி மேலாளர் ஹெல்மெட்டுடன் தலைநசுங்கி சாவு

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம், வளவனூர் திருக்குறிப்புதொண்டர் நகரை சேர்ந்தவர் ராஜா (32). இவர், புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி பவானி என்ற மனைவி உள்ளார். 10 மாத ஆண் குழந்தை உள்ளது. ராஜாவும், கம்பெனியில் உடன் பணிபுரியும் சீனியர் இன்ஜினியர் புஷ்பராஜ் (29) என்பவரும், ஒரே பைக்கில் வேலைக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் காலை இருவரும் பைக்கில் வளவனூரில் இருந்து வேலைக்கு புறப்பட்டனர். ராஜா ஹெல்மெட் போட்டு பைக்கை ஓட்டி வந்தார். பின்னால் புஷ்பராஜ் அமர்ந்து இருந்தார். புதுச்சேரி டி.வி. மலை மெயின் ரோடு செல்லிப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா மீது லாரியின் வலது பின்பக்க டயர் ஏறியது. இதில் ஹெல்மெட் உடைந்து தலை நசுங்கி ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புஷ்பராஜ் வலது காலில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து புஷ்பராஜ் அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement