தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முஷ்ணம் பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் இரட்டை இலை சின்னம் அழிப்பு

முஷ்ணம், செப். 16: முஷ்ணம் கடைவீதி பகுதியில் உள்ள அண்ணா சிலையில் அதிமுக சார்பில் புதிதாக அண்ணா சிலைக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இந்த சிலை ஏற்கனவே 1973ம் ஆண்டு அப்போதைய எம்ஜிஆர் திறந்து வைத்தார். அப்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது பொதுவாக அமைக்கப்பட்டிருந்ததால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா, கலைஞர் பிறந்த நாட்களின்போது மரியாதை செலுத்தும் நடைமுறையில் இருந்தது.

Advertisement

தற்போது வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் அண்ணா சிலை கீழே உள்ள பீடத்தில் இரட்டை இலை சின்னத்தை வரைந்ததாக கூறப்படுகிறது. இதை திமுகவினர் தட்டி கேட்கவே, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி அதிமுகவினரை எச்சரித்தனர். பின்னர் அண்ணா சிலை அடி பீடத்தில் வரையப்பட்டிருந்த அதிமுக சின்னத்தை அழித்தனர். இருப்பினும் அசம்பாவிதம் தடுக்க சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் தலைமையில் போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று 2 கட்சியினரும் தனித்தனியாக சென்று பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement