தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

சின்னசேலம், செப். 15: சின்னசேலம் காவல் சரகம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புக்கிரவாரி கிராம பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கீழ்குப்பம் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

Advertisement

அப்போது புக்கிரவாரி நடுத்தெரு பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அதே ஊரைச் சேர்ந்த பாண்டித்துரை(25) மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.   இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் புக்கிரவாரி ஏரிக்கரை அருகே மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் சென்று பாண்டித்துரையை பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 17 மதுபாட்டில்கள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் முட்புதரில் 80 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பாண்டித்துரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Advertisement