தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒரு ரவுடி கைது

நெய்வேலி, செப். 15: நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகனுக்கும், மற்றொரு தரப்புக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கணேசன் வீட்டிற்கு வந்த ரவுடி மோனிஷ் உள்ளிட்ட 8 பேர் உனது மகன் எங்கே என கேட்டு தகராறில் ஈடுபட்டு, வீட்டில் இருந்த பைக் மற்றும் கதவை உடைத்துள்ளனர். மேலும் கணேசன் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

Advertisement

இது குறித்து கடந்த 6ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், நெய்வேலி நகர போலீசார், மோனிஷ் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் இதில் தொடர்புடைய லட்டு என்கிற அருண்(22), பாட்டு என்கிற பாடலீஸ்வரன்(24), பெரிய லட்டு என்கிற அரவிந்த்(24), நிர்மல் ராஜ்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வடக்கு மேலூரை சேர்ந்த திருஞான முருகவேல் மகன் பட்டு என்கிற ராஜதுரை(22) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வட்டம் 5 என்எல்சி தைலம் தோப்பு அருகே ராஜதுரை பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று ராஜதுரையை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முற்படும்போது கீழே விழுந்ததில் ராஜதுரைக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜதுரை மீது 3 கொலை முயற்சி வழக்கு, ஒரு ஆயுதம் வழக்கு, 2 அடிதடி வழக்குகளும் என மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

Advertisement