தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேக்கிங் பொருட்கள் ஆர்டர் செய்த வில்லியனூர் தொழிலதிபரிடம் ரூ.3.42 லட்சம் மோசடி

புதுச்சேரி, செப். 15: பேக்கிங் பொருட்கள் ஆர்டர் செய்த வில்லியனூர் தொழிலதிபரிடம் ரூ.3.42 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாக பேக்கிங் தொழில் செய்து வருகிறார். இதற்காக பேக்கிங் பொருட்களை வாங்க ஆன்லைன் மூலம் தேடியுள்ளார். அப்போது ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மர்ம நபர் ஒருவர் பேக்கிங் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறியுள்ளார்.

Advertisement

இதனை நம்பி அவர் பேக்கிங் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதற்காக ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் குறைந்த அளவிலான பொருட்கள் மட்டும் டெலிவரி செய்யப்பட்டதால் அந்த மர்ம நபரை தொடர்பு கொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பணத்தை இழந்த அவர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

மேலும், உறுவையாறு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இணையவழி மூலம் போன் செய்து ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை உள்ளது. ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியதால் அந்த நபர் ரூ.91 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பிறகு இணையவழி குற்றவாளிகள் அவரது இணைப்பை துண்டித்துவிட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் கதிர்காமம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து எண்டோஸ்கோப்பி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூ.91 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்தினார். ஆனால் எண்டோஸ்கோப்பி வரவில்லை. இதனால் அப்பெண் பணத்தை இழந்ததை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement