தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேத்தியாத்தோப்பு அருகே 200 கிலோ முதலை பிடிபட்டது

சேத்தியாத்தோப்பு, டிச. 13: சேத்தியாத்தோப்பு அருகே தட்டானோடை கிராமம் பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மழை வெள்ளத்தின்போது அதிகளவில் வெள்ளநீர் வயல்வெளிப்பகுதிகள், வடிகால் ஓடைகளில் தேங்கியது. இதில் மழைவெள்ள நீரில் மூன்றுக்கும் மேற்பட்ட முதலைகள் அடித்து வரப்பட்டதாக வயல் பகுதிகளுக்குள் சென்று பார்த்த விவசாயிகள் பலரிடமும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் நேற்று விருத்தாசலம் வனத்துறையினர் முதலை ஒன்று தனியார் மீன்வளர்ப்பு குளத்தில் இருப்பதை அறிந்து வலைவீசி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர தேடுதலுக்கு பிறகு முதலை பிடிபட்டது. முதலையானது ஆறடி நீளமும், 200 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதனை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளும், கிராமமக்களும் கூறும்போது, இப்பகுதிக்குள் 3 முதலைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு முதலை பிடிபட்டுள்ளது. மற்ற முதலைகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அரசும், அதிகாரிகளும் முதலைகளை பாதுகாப்பான வசிப்பிடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான நிரந்தர இருப்பிடங்களை உருவாக்க வேண்டும். என கூறினர்.

Advertisement

Advertisement

Related News