தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிநீர் ஏற்றி சென்றபோது டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி போலீசார் விசாரணை

கடலூர், நவ. 13: குடிநீர் ஏற்றிச்சென்ற டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் குடிநீர் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு உதவியாளராக கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (45) என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கம்மியம்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வாகனத்தை எடுத்துச் சென்றபோது திருப்பாதிரிப்புலியூர்- கம்மியம்பேட்டை செல்லும் சாலையில் வாகனத்தில் அமர்ந்திருந்த வேல்முருகன் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது குடிநீர் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement