தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வானூர் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து டீக் கடை உரிமையாளர் பலி

வானூர், செப்.12: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே திண்டிவனம் புதுச்சேரி சாலையில் வி.கேணிப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (53) என்பவர் கடந்த 2 வருடங்களாக டீ கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நாகராஜ் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். டீ கடை எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் டிரான்ஸ்பார்மரின் உள்ளே இருந்த ஆயில் அருகில் இருந்த டீ கடையில் பீய்ச்சி அடித்துள்ளது.

Advertisement

இதில் நாகராஜ் மீது ஆயில் தெறித்து விழுந்ததால் பால் கொதிக்க வைத்திருந்த கேஸ் ஸ்டவ்விலும் பட்டு நாகராஜ் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றியதால் நாகராஜ் அலறி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆரோவில் போலீசார் நாகராஜனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement