தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவு சாமியார் வேடத்தில் ஒடிசாவில் பதுங்கிய குற்றவாளி அதிரடி கைது

கடலூர், ஆக. 12: கொலை வழக்கில் ஜாமீனில் வந்து ஒடிசாவில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரை கடந்த ஜனவரி 25ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் புதுநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி பாலாஜி ஜாமீனில் வந்தார். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய கடலூர் எஸ்பி ஜெயக்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாலாஜியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பாலாஜி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார், ரிஷிகேஷ், கேதர்நாத் பகுதியில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்த பாலாஜி அங்கிருந்து ஒடிசா மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு விரைந்த தனிப்படை போலீசார் ஒடிசா மாநிலம் ஜாய்ப்பூர் மலை பகுதியில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் அழைத்து வந்து புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 4 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஒடிசா மாநிலத்திற்கு சென்று கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.