தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்லூரியில் மாணவர்கள் மோதல்

விருத்தாசலம், ஆக. 12: விருத்தாசலத்தில் திரு அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம் மட்டும் இன்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது இரு பிரிவாக பிரிந்து மோதிக் கொள்கின்றனர். இதுபோல் கடந்த வாரமும் மோதிக்கொண்டனர். மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு மோதிக்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு தரப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் முனியன் விரைந்து வந்து அந்த மாணவர்களை கண்டித்து துரத்தி அனுப்பினார். ஆனால் அதனையும் மீறி மீண்டும் அந்த மாணவர்கள் தங்களது பைக்குகளில் அதிக சத்தம் எழுப்பியதுடன், கல்லூரி வளாகத்திற்குள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தனர். விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாலும் காவலர்கள் வரும்போது அவர்கள் தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகின்றனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் சேர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.