தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்

திருவெண்ணெய்நல்லூர், டிச. 11: திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மலட்டாறு வனப்பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது வனப்பகுதிக்குள் மர்மமான விலங்கு ஒன்று சென்றதாக அவர் கூறியதின் பேரில், இருவேல்பட்டு கிராம மக்களிடையே சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் வனவர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக கூறிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் காணப்பட்ட விலங்குகளின் காலடித்தடங்களை பதிவு செய்து எந்த விலங்கினுடையது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த காலடித்தடத்தில் நகம் பதிவாகி இருப்பதால் அது நாயின் காலடித்தடம் என்றும், சிறுத்தையின் காலடித்தடத்தில் நகம் பதியாது என்று கூறினர். எனவே இங்கு சிறுத்தைகள் நடமாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறி பொதுமக்களிடத்தில் நிலவிய அச்சத்தை போக்கினர்.

Advertisement

Advertisement