தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் நல்ல பாம்புடன் விளையாடியவர் உயிர் ஊசல்

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மது போதையில் இருந்த நபர் தனது வீட்டருகே வந்த நல்லபாம்பை பிடிக்க முயன்ற போது, அது அவரது கையை கடித்தது. ஆத்திரம் அடைந்தவர் பாம்பை தோளில் போட்டு கொண்டு மக்களை அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்திருக்கிறது புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், இங்கு உள்ள தரியலதிப்பா கிராமத்தை சேர்ந்தவர் கொள்ளப்பள்ளி கொண்டா (50), இவர் மது போதையில் அவரது வீட்டருகே ஊர்ந்து வந்த நல்ல பாம்பை பிடிக்க முயன்றுள்ளார்.

Advertisement

அப்போது அந்த பாம்பு அவரது கையை கடித்துள்ளது. ஆத்திரமடைந்த கொண்டா அவரை கடித்த பாம்பினை என்னையா? கடிக்கிறாய், எனக்கூறி பாம்பை பிடித்து, அதன் கழுத்தை நெறித்தபடி தனது கழுத்தில் மாலையாக சுற்றிக்கொண்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீது பாம்பை தூக்கி வீசுவது போல, அச்சுறுத்தும் வகையில் அங்கும், இங்கும் நடமாடினார். சிறிது நேரத்தில், பாம்பின் விஷம் தலைக்கேறியதில் வாயில் நுரைதள்ளியபடி பாம்பை கீழே வீசிவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள், அவரை மீட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement