தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ரெட்டிச்சாவடி, டிச. 10: கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா(49). கடந்த மாதம் 18ம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரமாக சித்ரா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து வந்த வாலிபர் ஒருவர், சித்ராவிடம் பேச்சு கொடுத்து அவரின் கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்பேரில், தூக்கணாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், சப்-இன்ஸ்பெக்டர் உத்ராம்பாள் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், விழுப்புரம் மாவட்டம் வி. அகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார்(21) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது வளவனூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது.இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் போலீசார் வழங்கினர்.

Advertisement