தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் 33 சிறுவர்கள் ஆஜர் அக்டோபர் 8ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம், ஆக. 9: தனியார் பள்ளி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 33 சிறுவர்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் மீதான வழக்கு விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி மதி 2022ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

இது தொடர்பாக 53 சிறுவர்கள் உள்பட 916 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இதில் 53 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் மீதான விசாரணை விழுப்புரத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 1,100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரகாசபூபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 33 சிறுவர்கள் நேரில் ஆஜராகினர். 20 பேர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, வராதது குறித்து மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.