தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வில்லியனூர் அருகே கஞ்சா விற்பனை தனியார் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, அக். 8: புதுச்சேரி வில்லியனூர் அருகே கஞ்சா விற்பனை தனியார் கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 279 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் உறுவையாறு பாலம் அருகே இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக மங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சென்றபோது, அங்கு 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து இருவரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, இருவரிடமிருந்து 270 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த அரிகரன் (20), வில்லியனூர் ஆச்சாரியபுரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20) என்பதும், இதில் ஒருவர் தனியார் கல்லூரி மாணவர் என்பதும், இவர்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள கஞ்சாவை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் சென்னைக்கு சென்று அங்குள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement