தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சின்னசேலம் அருகே ேசாகம் பைக் மீது மினிலாரி மோதி நண்பர்கள் 3 பேர் பலி

சின்னசேலம், ஆக. 8: சின்னசேலம் அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பம் மாரியம்மன் கோயிலை சேர்ந்தவர் தங்கசாமி மகன் தினேஷ்(25). திருமணமானவர். இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன்(23), பழனிசாமி மகன் சிவசக்தி(26) ஆகிய இருவரும் தினேஷ்யுடன் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். 3 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர் வந்திருந்தனர். இந்நிலையில் மூன்று பேரும் ஒரே பைக்கில் சின்னசேலத்தில் இருந்து அம்மையகரம் நோக்கி சென்றனர். அப்போது, சின்னசேலம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து சேலம் நோக்கி கொய்யாப்பழம் ஏற்றி வந்த மினி லாரி அதிவேகமாக வந்து இவர்கள் மீது மோதியது. இவர்கள் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தனர். தகவலறிந்த சின்னசேலம் எஸ்ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.