தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய ஆயில் டிராக்டர், கார் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து

கடலூர், ஆக. 8: கடலூர் அருகே காரைக்காடு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரி ஒன்று வேஸ்ட் ஆயில் ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சங்கொலிகுப்பம் அருகே லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த வேஸ்ட் ஆயில் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அப்போது அவ்வழியாக சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த டிராக்டர், மற்றும் ஒரு கார் டேங்கர் லாரியிலிருந்து வெளியேறி சாலையில் கொட்டி இருந்த ஆயிலில் வழுக்கி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் சாலையின் ஓரம் கவிழ்ந்தது. கார் மற்றும் டிராக்டர் ஓட்டுனர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து சாலையில் கொட்டியிருந்த ஆயிலை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related News