தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கவுன்சிலர் கடையில் மின் திருட்டு? தடுப்பு படை குழு திடீர் ஆய்வு நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பம், ஆக. 8: நெல்லிக்குப்பம் நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் சத்தியா புருஷோத்தமன். இவர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வருவதாக மின்வாரிய உயர் அலுவலகத்துக்கு புகார் வந்ததாக கூறி, மின் திருட்டு தடுப்பு படை குழுவினர் கவுன்சிலர் சத்தியா புருஷோத்தமன் கடையில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பழக்கடை மின்சார சர்வீஸ் நம்பருக்கு மின்சார வாரியத்தின் மூலம் பெறப்பட்ட மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தது மின் அளவீடு பெட்டியின் மூலம் தெரிய வந்தது. தன் மீது காழ்ப்புணர்ச்சியால் யாரோ மின் வாரியத்துக்கு விலாசம் இல்லாத கடிதம் அனுப்பியுள்ளதாக கவுன்சிலர் தெரிவித்தார். இச்சம்பவம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News