தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் புதுச்சேரி வாலிபர் போக்சோவில் கைது சேலம் மகளிர் போலீசார் அதிரடி

சேலம், டிச. 7: சேலத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புதுச்ேசரி அரசியல் கட்சி பிரமுகரை, சேலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் புளியந்தோப்பு, தொண்டமாநத்தம் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (38). அரசியல் பிரமுகர். வியாபாரம் செய்து வருகிறார். இவரும், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களின் மகளான 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் பாலமுருகன் அந்த சிறுமியிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். அச்சிறுமியை அவர் பாலியல் ரீதியில் வீடியோகாலில் டார்ச்சர் செய்து வந்துள்ளார். ேமலும் அவரது படத்தை அச்சிறுமியின் நெஞ்சில் பச்சை குத்தவைத்து கொடுமை செய்துள்ளார்.

Advertisement

இதுகுறித்த தகவல் சூரமங்கலம் மகளிர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பாலமுருகன் அந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிஹரசுதன் (38) என்பவரும் சிறுமியிடம் அத்துமீறியது தெரியவந்தது. அவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement