தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் காலாப்பட்டில் மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

காலாப்பட்டு, நவ. 7: புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வருடம் அதே மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இருவர் அங்கு நர்சிங் பயின்று வரும் 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் கல்லூரியில் அமைக்கப்பட்ட உள் புகார் கமிட்டியில் முறையிட்டனர். மாணவிகளின் புகாரை விசாரித்த உள்கமிட்டி மாணவிகளின் புகாரில் உண்மை இருப்பதாக கூறி எக்ஸ்ரே பிரிவு பணியாளர்கள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.

இதனிடையே இருவரில் ஒருவர் சிலதினங்களுக்கு முன்பு பணிக்கு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் இருவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரியும் நர்சிங் மாணவிகள் நேற்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகத்திடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement