தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் முதலீடு எனக்கூறி 2 பெண்களிடம் ரூ.2.92 லட்சம் மோசடி

புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி கதிர்காமத்தை சேர்ந்த பெண்ணுக்கு நண்பர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில், ஆன்லைன் முதலீட்டில் ரூ.1.08 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான லாபம் கிடைக்கவில்லை. முதலீடு பணத்தையும் அவரால் திரும்ப எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதேபோல், கதிர்காமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணும் இதேபோல் ஆன்லைன் முதலீட்டில் ரூ.1.84 லட்சத்தை இழந்துள்ளார்.

Advertisement

இதேபோன்று, கதிர்காமத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணிடம் முத்ரா லோன் ஆபீசர் என அறிமுகம் செய்து, ரூ.1 லட்சம் கடனை குறைந்த வட்டியில் தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.43,600 செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், அந்த தொகையை அனுப்பியுள்ளார். அதன்பிறகு கடன் கிடைக்கவில்லை. இதுபற்றி கேட்டதற்கு, மார்பிங் போட்டோக்களை அனுப்பி, மேலும் பணம் கேட்டு அந்த நபர் மிரட்டியுள்ளார்.

அதேபோல், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத நபர் போன் செய்து, உங்கள் தங்கைக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், வங்கி, ஏடிஎம் கார் விவரங்களை கூறவே, அந்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரத்தை எடுத்து விட்டார். இது குறித்து மேற்கண்ட பாதிக்கப்பட்ட 3 பெண்களும் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News