தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண்ணை தாக்கிய கணவர் கைது

சின்னசேலம், நவ. 5: சின்னசேலம் அருகே லட்சியம் காடுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காளியாப்பிள்ளை(35). இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த சத்யா என்பவரும் திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வசித்து வந்தனர். மேலும் காளியாப்பிள்ளை நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் காளியாப்பிள்ளையும், அவரது மனைவி சத்யாவும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதே ஊரில் உள்ள சத்யாவின் அக்கா பானுப்பிரியா(33) வீட்டிற்கு வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் காளியாப்பிள்ளை டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டார். அதனால் சத்யா அவரது அக்கா பானுப்பிரயா வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த காளியாப்பிள்ளை கடந்த 31ந்தேதி இரவு பானுப்பிரயா வீட்டிற்கு சென்று அவரை அசிங்கமாக திட்டியதுடன், அவரது மனைவி சத்யாவையும் திட்டி கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து பின் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் காளியாப்பிள்ளை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News