தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ தீ வைத்து எரிப்பு

புதுச்சேரி, நவ. 5: புதுச்சேரி ராஜாநகரை சேர்ந்தவர் சசி (எ) சிவக்குமார் (47). இவர், புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். பின்னர் சாப்பிட்டு தூங்கி விட்டார். அதிகாலை 2 மணியளவில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து சென்று பார்த்தபோது அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இது குறித்து அவர், உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் அதே தெருவில் வசிக்கும் விஜய் பெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரித்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன், சிவக்குமாரின் நண்பர் பாஸ்கரிடம் விஜய் பிரச்னை செய்துள்ளார். இதனை சிவக்குமார் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆட்டோவை எரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News