தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடையில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள் பாலம் அமைத்து தர வலியுறுத்தல்

திட்டக்குடி, டிச. 4: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாவலூர் கிராமத்தில் காத்திலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார். அவரது உடலை இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் ஓடைப்பாதை முற்றிலும் சேதமடைந்து செல்வதற்கு வழியற்ற நிலையில் இருந்தது. மயானத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஓடையை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் ஓடியது. இதையடுத்து இறந்த காத்தலிங்கம் உடலை அடக்கம் செய்ய மார்பளவு தண்ணீரில் அவரது உறவினர்கள் பாடையை தோளில் சுமந்தபடி ஆபத்தான முறையில் ஓடையை கடந்து சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ஓடையின் அருகே பாதை இல்லை. யாரேனும் இறந்தால் ஓடையை கடந்து சென்றுதான் அடக்கம் செய்து வந்தோம். தற்போது ஓடையில் தண்ணீர் செல்வதால் தண்ணீரில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான தீர்வு காண வேண்டும் என்றனர்.

Advertisement

Advertisement